ELATHI TNPSC POTHU TAMIL NOTES 2023: ஏலாதி

Photo of author

By TNPSC EXAM PORTAL

ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏலாதி

  • ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி
  • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எணபத்தொரு வெண்பாக்களை கொண்டுள்ளது.
  • நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
  • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
  • ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.

To Download TNPSC Current Affairs

  • இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
  • அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
  • பாயிரம் – 1, தற்சிறப்பாயிரம் – 1, பாடல்கள் – 80
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.

ELATHI TNPSC POTHU TAMIL NOTES

ஆசிரியர் குறிப்பு

  • ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: ஏலாதியை இயற்றியவர் கணமேதாவியார்.
  • இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
  • இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
  • காலம் = கி.பி 5ஆம் நூற்றாண்டு
  • திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. வடமொழிப் புலமை மிக்கவா்.

ELATHI TNPSC POTHU TAMIL NOTES

நூலின் பெயர்க்காரணம்

  • ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று, இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

ELATHI TNPSC POTHU TAMIL NOTES

நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில்

  • ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: எடுத்தல்
  • முடக்கல்
  • நிமிர்தல்
  • நிலைத்தல்
  • படுத்தல்
  • ஆடல்

ELATHI TNPSC POTHU TAMIL NOTES

முக்கிய அடிகள்

  1. தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி

    வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்

    கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்

    வைத்து வழங்கிவாழ் வார்

  • தலைஇழந்த – தலைமகனை இழந்த கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர். கொடையாளி கைக்குப் பொருள்வந்து சேரும்.
  1. சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது

    மேவல் எளிது; அரிது மெய்போற்றல்

  • இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது.
  1. வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு

    நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய

    பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்

    நூல்நோக்கி வாழ்வான் நுனித்து – கணிமேதாவியார்

  1. இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்

    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்

    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ (டு)

    எழுத்தின் வனப்பே வனப்பு

  • இடையின் அழகோ, தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா.
  • எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:
error: Content is protected !!