AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
- AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்: எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன.
- அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
- அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.
- இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
- ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
![AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள் 1 AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:](https://tnpscexamportal.com/wp-content/uploads/2023/05/project_20230520_1735396-01.jpg)
ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்
- சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
![AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள் 2 AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:](https://tnpscexamportal.com/wp-content/uploads/2023/05/project_20230520_1736295-01-1024x1024.jpg)
வள்ளல்கள்
- அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.
- மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.
- விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம்.
- இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.
![AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள் 3 AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:](https://tnpscexamportal.com/wp-content/uploads/2023/05/project_20230520_1736161-01.jpg)
மூதுரை
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் – மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு
பொருள்
- ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.
சொல்லும் பொருளும்
- மாசற்ற – குறை இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – நாடு
![AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள் 4 AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:](https://tnpscexamportal.com/wp-content/uploads/2023/05/project_20230520_1736029-01-1024x1024.jpg)
ஒளவையார்
- மூதுரை – ஒளவையார் எழுதிய நீதிநூல்களில் இதுவும் ஒன்று.
- வாக்குண்டாம் எனது தொடங்குவதால் இந்நூலை “வாக்குண்டாம்” எனும் பெயரால் அழைப்பர்.
- இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
- பழமையான கருத்துக்களை கூறுவதால் மூதுரை என்று அழைக்கப்படுகிறது.
- சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஒளவையார் எனும் பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர்.
- இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்த்துள்ளனர்.
ஒளவையார் எழுதிய நூல்கள்
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை