INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: இனியவை நாற்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்

  • INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: பாடல்கள் = 1 + 40 = 41
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • இனிய 3 பொருள்கள்  – 36
  • இனிய 4 பொருள்கள்  – 04
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
  • இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா.
  • To Know More About – XIAOMI GAME TURBO APK
  • ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.
  • இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன (1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன;
  • இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

கடவுள் வாழ்த்து

  • INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

ஆசிரியர் குறிப்பு

  • INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: பெயர் – மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
  • ஊர் – மதுரை
  • காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
  • இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன்.
  • இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.
  • இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார்.
  • ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும்.
  • இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
  • இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம்.
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

முக்கிய அடிகள்

  1. குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே

கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே

மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்

திருவும், தீர்வு இன்றேல், இனிது

  • குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
  1. சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது

  • வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.

சொற்பொருள்

  • குழவி – குழந்தை
  • பிணி – நோய்
  • கழறும் – பேசும்
  • மயரி – மயக்கம்
  • சலவர் – வஞ்சகம்
  • மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
  1. ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே
  • தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது.
  1. ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
  • மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது.
  1. வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது.
  1. தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை

    விடமென்று உணர்த்தல் இனிது

  • மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
  1. சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

    மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

    எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

    எத்துணையும் ஆற்ற இனிது

  • சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று;
  • சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும்.
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES
INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

கடவுள் வாழ்த்து

  1. கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே

தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே

முந்துறப் பேணி முகநான் குடையானைச்

சென்றமர்ந் தேத்தல் இனிது

அருஞ்சொற்பொருள்

  • கண்மூன்றுடையான் – சிவபெருமான்
  • துழாய்மாலையான் – திருமால் / பெருமாள்
  • முகநான்குடையான் – பிரமன்
  • ஏத்தல் – போற்றித்துதித்தல்
error: Content is protected !!