NOBEL PRIZE IN LITERATURE 2024 | 2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

Photo of author

By TNPSC EXAM PORTAL

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024: ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, 2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது.

யார் இந்த தென்கொரிய பெண்?

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024: 1970 ஆம் ஆண்டு தென் கொரிய நகரமான குவாங்ஜூவில் பிறந்தவர் ஹான் காங். தனது ஒன்பது வயதில் தனது குடும்பத்துடன் சியோலுக்குச் குடிப்பெயர்ந்தார். இவர் இலக்கிய பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர். 

அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தந்தையே போலவே பெண் ஹான் காங்க்கும் சிறுவயதில் இருந்தே எழுத்து மீது மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

இவர் எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் இயங்கி வருகிறார்.இவர் முதலில் இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995ஆம் ஆண்டு ‘லப் ஆஃப் யோசு’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

இதன்பிறகு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகள் வெளியிட்டார். இதன்பிறகு 2007ஆம் ஆண்டு ‘தி வெஜிடேரியன்’ என்ற நாவலை எழுதினார். 

இந்த நாவல் சர்வதேச அளவில் ஹன் கங்குக்கு புகழை தேடி தந்தது. வழக்கமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்று கொள்ள மறுக்கும் கதாநாயகன் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளை பேசியது இந்த நாவல்.

இறைச்சியை உண்ண மறுப்பதால் மோசமான வன்முறைகளை சந்திக்கிறது அந்த கதாபாத்திரம்இதுபோன்ற பல நாவல்கள், சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றர் ஹான் காங். இந்த நிலையில், தற்போது இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

error: Content is protected !!